கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி: தினமலர் அணி சாம்பியன்

கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை: கோவை மாநகர போலீஸ் மற்றும் 'ஸ்பார்க்கிளிங் ஈவென்ட்ஸ்' இணைந்து நடத்திய அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் தினமலர், தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ், விமானப்படை, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம், வருமான வரித்துறை, 110 பட்டாலியன், வணிக வரித்துறை, மீடியா 11, கோவை பிரஸ் கிளப் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன.

அக்டோபர் 9 அன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற தினமலர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் துவக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். 20 ஓவர்களில் தினமலர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பதிலுக்கு ஆடிய துணை கமிஷனர் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டி.எல்.எஸ். முறைப்படி தினமலர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினமலர் அணியின் விஜய் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் அணி மூன்றாம் இடத்தையும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...