சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நடமாடி வருகிறது. முன்னர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர், நெல்லித்துறை, தாசம்பாளையம் போன்ற கிராமங்களில் அதிகம் நடமாடிய இந்த யானை, அண்மைக்காலமாக சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வருகிறது.



இந்நிலையில், இன்று இரவு சுமார் 7:00 மணியளவில் காட்டு யானை பாகுபலி சிறுமுகை-லிங்கபுரம் சாலையில் லிங்கபுரம் கிராமத்தின் அருகே நடந்து வந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டு யானை சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த நிலையில், இது குறித்து உடனடியாக உள்ளூர் மக்களுக்கும், சிறுமுகை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் லிங்காபுரம் ஊர் மக்கள் இணைந்து டார்ச் லைட்டுகளை அடித்து, சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை பாகுபலியை அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதற்கு முன்னதாக, காட்டு யானை பாகுபலி சாலையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டு சாலையின் நடுவே நின்றதால், அந்த வழியாக வந்த வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...