கோவை திரு.வி.க நகரில் சாலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

கோவை உருமாண்டம்பாளையம் திரு.வி.க நகரில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை உருமாண்டம்பாளையம் 14-வது வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை.



கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. நேற்று இரவு, இப்பகுதியை சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது தோண்டப்பட்ட குழியில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுக 14-வது வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ் தலைமையில் வெள்ளக்கிணறு முதல் கணபதி வரை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 14-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா தங்கவேலு, உதவி பொறியாளர் உத்தமன், துடியலூர் காவல்துறையினர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வேலைகள் செய்து சாலையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...