தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காரமடை வனப்பகுதியில் விதைப் பந்துகளை வீசினர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் காரமடை வனப்பகுதியில் 15,000க்கும் மேற்பட்ட விதைப் பந்துகளை வீசினர். இந்த நிகழ்வு உலக வனவிலங்கு வாரம் 2024ஐ முன்னிட்டு நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மாபெரும் விதைப்பந்து தயாரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.கீதாலட்சுமி தலைமையில் சுமார் 1000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு 15,000க்கும் மேற்பட்ட விதை பந்துகளை தயார் செய்தனர்.



இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 7 ஆம் தேதி, சுமார் 200 மாணவர்கள் காரமடை வனச்சரகத்திற்குச் சென்று தயாரிக்கப்பட்ட விதைப் பந்துகளை வனப்பகுதிக்குள் வீசினர். இந்த நிகழ்வு தமிழ்நாடு வனத்துறை, ITC-Limited மற்றும் COODU என்.ஜி.ஓ., காரமடை ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.கீதாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காரமடை வனச்சரக அலுவலர் ரஞ்சித் அவர்கள் விதைப்பந்துகளை வீசி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.



இந்த முயற்சி எதிர்காலத்தில் காடுகளின் பரப்பை மேம்படுத்தவும், வன நீர்நிலைகளின் நடத்தையை மேம்படுத்தவும், வனவிலங்குகளுக்கு தங்குமிடம் அளிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வின் ஒரு பகுதியாக, வன சுற்றுச்சூழல் மற்றும் உயிர் பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களுக்கு விளக்கக்காட்சி வழங்கும் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மையர் முனைவர் அ.ரவிராஜ் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.



உலக வனவிலங்கு வாரம் 2024ஐ முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மையம், Eco Club, MasonA GE Club, Food Club, Rotaract Club, NSS ஆகியவற்றுடன் தமிழ்நாடு வனத்துறை, ITC-லிமிடெட், கோயம்புத்தூர் மற்றும் COODU NGO, காரமடை ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.

நிகழ்வில் உணவு செயல்முறை பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் ITC-லிமிடெட் திட்ட மேலாளர் தினேஷ் மற்றும் COODU NGO இயக்குனர் கதிரேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...