கோவை: கிழக்கு மண்டல தலைவர் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்; இந்திரா கார்டன் பகுதியில் ஆய்வு

கோவை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் 52வது வார்டில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், 54வது வார்டில் உள்ள இந்திரா கார்டன் பகுதியில் 60 அடி திட்டசாலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. 52வது வார்டில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதுடன், 54வது வார்டில் சாலை சீரமைப்பு குறித்த ஆய்வும் நடைபெற்றது.

கிழக்கு மண்டலம், வார்டு எண் 52க்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் லே அவுட் பகுதியில், சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காங்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இப்பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துசாமி, உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் ரா. மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



அதேநேரம், வார்டு எண் 54க்கு உட்பட்ட இந்திரா கார்டன் பகுதியில், 60 அடி திட்டசாலையை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி, 54-வது வட்ட மாமன்ற உறுப்பினர் சார்பாக தனபால், 54வது வட்டச் செயலாளர் ஆனந்த் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில், அந்த சாலையை உடனடியாக சீரமைத்துக் கொடுக்குமாறு கிழக்கு மண்டல தலைவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த இரண்டு நிகழ்வுகளும் கோவை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...