கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - பல பகுதிகளில் தொடர் மழை

கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அக்டோபர் 9 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், கோவைப்புதூர், உக்கடம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, சுந்தராபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும், ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...