கிணத்துக்கடவு தொகுதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

கிணத்துக்கடவு தொகுதி குறிச்சி பகுதியில் எம்எல்ஏ செ.தாமோதரன் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி குறிச்சி பகுதி 97வது வட்டக் கழகத்திற்குட்பட்ட பழனியப்பா லே அவுட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டித்தர வேண்டி எம்எல்ஏ செ.தாமோதரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் ரூபாய் 15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ செ.தாமோதரன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, 94வது வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன், 94A வட்ட கழக செயலாளர் மாணிக்கவாசகம், 96வது வட்ட கழக செயலாளர் செந்தில்குமார், 96A வது வட்ட கழக செயலாளர் உதயகுமார், 97வது வட்ட கழக செயலாளர் கேபிள் பாபு, 97A வட்ட கழக செயலாளர் RTO பிரகாஷ், 98வது வட்ட கழக செயலாளர் நிஜாம் மற்றும் 98A வது வட்ட கழக செயலாளர் குமாரசாமி ஆகியோருடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...