ஆயுத பூஜை - தசரா பண்டிகைக்கு 140 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சேவை

ஆயுத பூஜை - தசரா பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 9 முதல் 11 வரை மூன்று நாட்களுக்கு இந்த சேவை தொடரும்.


Coimbatore: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு நல்ல செய்தி. ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்து சேவை தொடரும். மொத்தம் 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு 100 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 40 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ஏற்பாடு தொடர் விடுமுறை காலத்தில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...