கோவை கோட்டைமேடு ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: சால்னா கேட்டதற்காக இரண்டு நபர்கள் வன்முறை

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹோட்டலில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டதற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தினர். பலத்த காயமடைந்த அமானுல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அபிதா ஹோட்டலில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த கரீம் மற்றும் சமீர் ஆகியோர் அபிதா ஹோட்டலுக்கு உணவு உண்ண வந்தனர். அப்போது புரோட்டாவுக்கு சால்னா கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது, மீண்டும் வாக்குவாதம் முற்றி, இருவரும் அமானுல்லாவை கடுமையாக தாக்கினர்.



தாக்குதலின் போது அமானுல்லா தள்ளப்பட்டு அருகிலிருந்த போர்டில் விழுந்தார். இதனால் அவரது தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. மேலும், அவரது கண் மற்றும் இடுப்புப் பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, முதலில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அமானுல்லா சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இப்பகுதியில் தினமும் மது போதையில் வரும் நபர்கள் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...