திருப்பூர் வெடி விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி; பொதுமக்களும் கைகொடுப்பு

திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தங்குமிடம், உணவு வழங்கி உதவி. பொதுமக்களும் தன்னார்வமாக உதவி கரம் நீட்டினர்.


Coimbatore: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி உதவிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் தன்னார்வமாக முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் கார்த்தி என்பவரின் வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில், அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அங்கு வசித்த குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டது.



இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரித்துராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்டவர்களை பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு, உடை மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்தனர்.

சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...