திருப்பூர் வெடி விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி; பொதுமக்களும் கைகொடுப்பு

திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தங்குமிடம், உணவு வழங்கி உதவி. பொதுமக்களும் தன்னார்வமாக உதவி கரம் நீட்டினர்.


Coimbatore: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி உதவிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் தன்னார்வமாக முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் கார்த்தி என்பவரின் வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில், அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அங்கு வசித்த குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டது.



இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரித்துராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்டவர்களை பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு, உடை மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்தனர்.

சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

Newsletter

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...