கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் புதிய மதுபான கடை: பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே புதிய தனியார் FL2 மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குடியிருப்பு பகுதி, சந்தை அருகில் கடை அமைவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்கின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், சந்தை அருகே புதிதாக தனியார் FL2 மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய FL2 மதுபான கடை அமையவிருக்கும் இடம், குடியிருப்புப் பகுதி மற்றும் சந்தை ஆகியவை ஒரே இடத்தில் உள்ளதால், பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரிய இடையூறு ஏற்படும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் என்றும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த இடத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடைக்கு பின்புறம் இந்த புதிய தனியார் FL2 மதுபான கடை அமைந்தால், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும், சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலும் ஆபத்தும் உருவாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, புதிய FL2 மதுபான கடை அமைவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று கோரி, அந்த பகுதி பொதுமக்கள் சார்பாக இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...