சர்வதேச காராத்தே சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஆஸ்திரியாவில் நடைபெற்ற 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு சரவணம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவையைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச கராத்தே போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் புனேவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கோஜுரியோ கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவை வீரர்கள், ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆஸ்திரியாவில் நடந்த 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 26 நாடுகளில் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய அணி சார்பில் கோவையைச் சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே, குழு என வயது மற்றும் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையைச் சேர்ந்த கைலாஷ், சுனில், நந்தகுமார், ஆகாஷ், மஹா கவுரி ஆகிய ஐந்து பேரும் தலா ஒரு வெண்கலப் பதக்கமும், தார்ணீஷ் என்ற மாணவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர்.

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் கராத்தே சாம்பியன்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஏசியன் கராத்தே அகாடமி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் பகுதி செயலாளர் சிரவை சிவா, பார்த்திபன், பாஸ்கரன், சென்செய் ஆர்.முத்துராஜு, ஹென்றி சுரேஷ், சென்செய் பிரமோஷ், கோபாலகிருஷ்ணன், செந்தில்வேல், ஷிஹான் டி.முத்தையா, சுகுமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...