உடுமலையில் முறைகேடாக செயல்படும் மதுபானக் கூடங்களில் விதிமீறி மது விற்பனை

உடுமலையில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்கின்றன. பொதுமக்கள் அதிருப்தியுடன் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் முறையான அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனுஷம் திரையரங்கம் பின்புறம், ராஜேந்திர ரோடு பூங்கா எதிரில், அர்பன் வங்கி எதிரில், தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு அருகிலேயே அனுமதியற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூடங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையும் மது விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.



இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் உடுமலை காவல்துறை மற்றும் தாராபுரம் மதுவிலக்கு காவல்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காவல்துறையின் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...