உடுமலை அருகே பூளவாடியில் மருந்து தெளித்ததால் கருகிய தக்காளி செடிகள்: விவசாயி வேதனை

உடுமலை அருகே பூளவாடியில், விவசாயி மாசிலாமணி தெளித்த மருந்தால் தக்காளி செடிகள் கருகின. விளைச்சலுக்கு தயாராய் இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த சேதம், விவசாயியின் நெஞ்சில் இடியாய் இறங்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியில் விவசாயி மாசிலாமணி பயிரிட்டிருந்த தக்காளி செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளானதால், அவர் தெளித்த மருந்தால் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பெரும் அளவில் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், விவசாயி மாசிலாமணியின் தக்காளி செடிகளில் லேசான நோய் தாக்குதல் ஏற்பட்டதால், அவர் உடுமலையிலுள்ள வேலன் என்ற தனியார் நிறுவனத்தில் மருந்து வாங்கி தெளித்தார்.



மருந்து தெளித்தால் தக்காளி செடிகள் நோய் நீங்கி சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கையில் இருந்த மாசிலாமணியின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மருந்து தெளித்த சில நாட்களிலேயே தக்காளி செடிகள் கருக ஆரம்பித்தன.



விளைச்சலுக்கு தயாராக இருந்த தக்காளிகள் வாடியதோடு, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் தக்காளி சாகுபடியில் பெரும் நட்டமும் ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலைத்துறையினர் மற்றும் மருந்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயி குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மருந்து தெளிப்பால் தக்காளி செடிகள் கருகியதா என கண்டறிய வேளாண்மை துறை ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைப்பதாகவும், அவர்கள் தரும் அறிக்கைகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...