திருப்பதி லட்டு விவகாரம் மக்களை திசைதிருப்பும் செயல் - சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், பாலஸ்தீன் போர், சாம்சங் தொழிலாளர் பிரச்சினை, பழங்குடி மக்கள் நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.


கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (அக்.6) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாலஸ்தீன் போரில் 45,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, நேரடி போரிலும் ஈடுபட்டிருப்பது உலக அளவில் பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது இந்தியாவின் அணிசேரா கொள்கைக்கு எதிரானது என்றும், இன அழிப்புக்கு ஆதரவு அளிக்கும் போக்கு என்றும் தெரிவித்தார். ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இதனை முன்னிட்டு 7ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிவோர் சங்கம் அமைக்க முடிவெடுத்துள்ளனர் என்றும், அதற்கு உரிமையும் உண்டு என்றும் கூறிய அவர், சாம்சங் நிறுவனம் அதனை மறுப்பதாகவும் தெரிவித்தார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இந்தப் பிரச்சினைக்கு மூன்று அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

கோவையில் பழங்குடி மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களை தனியார் விடுதி நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், சுடுகாடு உட்பட பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஈஷா வனத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், பெண்களை மூளைச்சலவை செய்து தாய் தந்தை சொல்வதைக் கூட கேட்க மறுக்கும் அளவிற்கு நிலைமை உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஈஷா மீது பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசிய அவர், இது மக்களைத் திசைதிருப்பும் அநாகரீகமான செயல் என்றார். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளபோது, இந்த விவகாரம் அரசியல் அநாகரீகம் என சாடினார்.

மேலும், சிறு குறு தொழில்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், மின் கட்டண உயர்வை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தொழில்களைக் காப்பாற்றுவதற்கு மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...