கோவை 27வது வார்டில் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்: கோரிக்கைகள் கேட்டறிந்த திமுக செயலாளர் நா. கார்த்திக்

கோவை பீளமேடு 27வது வார்டில் உள்ள ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டு குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை பீளமேடு வார்டு எண் 27-ல் உள்ள "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பு" வளாகத்தில் அக்டோபர் 5 அன்று "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்" நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது குடியிருப்போர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தனர். தார்ச்சாலை சீரமைப்பு, குப்பை மேலாண்மை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்த நா. கார்த்திக், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், 27வது வட்டக் கழக துணைச் செயலாளர் சாந்தி நகர் அ. செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி ரமேஷ் குமார், வட்டக் கழகப் பொருளாளர் அங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக கழக மூத்த முன்னோடிகளான மில் ரவி, கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன், கங்குவார் சீனு, மதிவாணன் மற்றும் பல திமுக கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...