வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி: முதியவர் காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் 71 வயது முதியவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டவர், வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வாடகை நிலுவை, வீடு மற்றும் ஆவணங்கள் அபகரிப்பு குறித்து விசாரணை கோரியுள்ளார்.


Coimbatore: கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் பழனிசாமி, தனது வீட்டை வாடகைக்கு விட்டவர்கள் வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பழனிசாமியின் புகார் மனுவின்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை (A Block 8) ஜன்னத் என்பவருக்கு மாதம் ₹2,500 வாடகைக்கு விட்டுள்ளார். Green Garden சங்கத்தைச் சேர்ந்த முத்தப்பா என்கிற அப்துல் ரகுமான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாகவும், ₹75,000 முன்பணமாக பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜன்னத் முறையாக வாடகை செலுத்தாததால், பழனிசாமி நிலுவைத் தொகையை கேட்டபோது, எழுத படிக்கத் தெரியாத தன்னிடம் முத்தப்பா வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜன்னத் ₹1,36,500 வாடகை நிலுவை வைத்துள்ள நிலையில், ஜன்னத்தும் முத்தப்பாவும் சேர்ந்து தனது வீட்டையும் ஆவணங்களையும் அபகரித்துக் கொண்டதாக பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து கேள்வி எழுப்பினால் இருவரும் சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும் பழனிசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பழனிசாமிக்கு மாற்றுத்திறனாளி மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வருகிறார். வீடு மாடியில் இருப்பதால் ஏற்பட்ட சிரமத்தால்தான் வீட்டை வாடகைக்கு விட்டதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...