வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி: முதியவர் காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் 71 வயது முதியவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டவர், வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வாடகை நிலுவை, வீடு மற்றும் ஆவணங்கள் அபகரிப்பு குறித்து விசாரணை கோரியுள்ளார்.


Coimbatore: கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் பழனிசாமி, தனது வீட்டை வாடகைக்கு விட்டவர்கள் வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பழனிசாமியின் புகார் மனுவின்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை (A Block 8) ஜன்னத் என்பவருக்கு மாதம் ₹2,500 வாடகைக்கு விட்டுள்ளார். Green Garden சங்கத்தைச் சேர்ந்த முத்தப்பா என்கிற அப்துல் ரகுமான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாகவும், ₹75,000 முன்பணமாக பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜன்னத் முறையாக வாடகை செலுத்தாததால், பழனிசாமி நிலுவைத் தொகையை கேட்டபோது, எழுத படிக்கத் தெரியாத தன்னிடம் முத்தப்பா வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜன்னத் ₹1,36,500 வாடகை நிலுவை வைத்துள்ள நிலையில், ஜன்னத்தும் முத்தப்பாவும் சேர்ந்து தனது வீட்டையும் ஆவணங்களையும் அபகரித்துக் கொண்டதாக பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து கேள்வி எழுப்பினால் இருவரும் சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும் பழனிசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பழனிசாமிக்கு மாற்றுத்திறனாளி மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வருகிறார். வீடு மாடியில் இருப்பதால் ஏற்பட்ட சிரமத்தால்தான் வீட்டை வாடகைக்கு விட்டதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...