வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலை 6 மணிக்குப் பின் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலக்குடி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைக் காண, மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் 'கபாலி' என்ற யானை இச்சாலையில் முகாமிட்டு வாகனங்களை விரட்டியது. தற்போது கடந்த சில நாட்களாக 'கணபதி' என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி சாலையில் நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறை, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் வனப்பகுதியை ஒட்டியே சாலை அமைந்துள்ளதால், யானைகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாலை 6:00 மணிக்குப் பின் அதிரப்பள்ளி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் நேற்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...