சூலூரில் திடீர் வாகன சோதனை: 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிப்பு

கோவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனை நடத்தினர். சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 4) இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வாகன எண்கள், வாகனத்துக்கான சான்றிதழ்கள், ஹெல்மெட் அணிந்து வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் உள்ள சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த திடீர் வாகன சோதனையின் போது, ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...