கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை: உயர்நீதிமன்ற குழு நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது. பழப்பண்ணையை மூடக்கூடாது என நூற்றக்கணக்கானோர் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது.

கடந்த 1900 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பழப்பண்ணையில் மங்குஸ்தான், துரியன், வாட்டர் ஆப்பிள், முட்டைப் பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வகை பழங்கள், மூலிகை செடிகள், மலர் வகைகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கான மரக்கன்றுகளும் இங்கு தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



இப்பண்ணை யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரதசக்கிரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தது.

இதன்படி, உயர்நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சி.மோகன், ராகுல் பாலாஜி, சந்தானராமன் மற்றும் அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.



அப்போது, மாணவ மாணவிகள், சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கல்லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற குழுவினரிடம் மனுக்களை அளித்தனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் குழுவினரை நேரில் சந்தித்து கல்லாறு பழப்பண்ணையின் அவசியம் குறித்தும், 120 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழப்பண்ணையை தற்போது திடீரென யானை வழித்தடம் என கூறுவதை ஏற்க இயலாது என்றும் தெரிவித்தார்.

குழுவினர் பண்ணையை முழுவதுமாக ஆய்வு நடத்தினர். ஆவணங்களின் அடிப்படையில் யானைகள் இப்பகுதியில் நடமாடும் இடங்களா என ஆய்வு செய்தனர். அப்போது தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உடனிருந்து உதவினர்.

ஆய்விற்குப் பின்னர் இது குறித்த விரிவான ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக் குழுவினர் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...