கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை: உயர்நீதிமன்ற குழு நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது. பழப்பண்ணையை மூடக்கூடாது என நூற்றக்கணக்கானோர் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது.

கடந்த 1900 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பழப்பண்ணையில் மங்குஸ்தான், துரியன், வாட்டர் ஆப்பிள், முட்டைப் பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வகை பழங்கள், மூலிகை செடிகள், மலர் வகைகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கான மரக்கன்றுகளும் இங்கு தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



இப்பண்ணை யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரதசக்கிரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தது.

இதன்படி, உயர்நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சி.மோகன், ராகுல் பாலாஜி, சந்தானராமன் மற்றும் அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.



அப்போது, மாணவ மாணவிகள், சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கல்லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற குழுவினரிடம் மனுக்களை அளித்தனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் குழுவினரை நேரில் சந்தித்து கல்லாறு பழப்பண்ணையின் அவசியம் குறித்தும், 120 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழப்பண்ணையை தற்போது திடீரென யானை வழித்தடம் என கூறுவதை ஏற்க இயலாது என்றும் தெரிவித்தார்.

குழுவினர் பண்ணையை முழுவதுமாக ஆய்வு நடத்தினர். ஆவணங்களின் அடிப்படையில் யானைகள் இப்பகுதியில் நடமாடும் இடங்களா என ஆய்வு செய்தனர். அப்போது தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உடனிருந்து உதவினர்.

ஆய்விற்குப் பின்னர் இது குறித்த விரிவான ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக் குழுவினர் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...