உடுமலை திருப்பதி கோவிலில் நவராத்திரி கொழு விழா துவக்கம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் 9 நாள் நவராத்திரி கொழு விழா துவங்கியது. அம்பாள் சைலபுத்திரி தேவி வடிவில் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை நவராத்திரி கொழு விழா நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று அம்பாள் சைலபுத்திரி தேவி வடிவத்தில் மஞ்சள் நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் வெங்கடேச பெருமாள் சாமி புறப்பாடு மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



கோவில் பகுதியில் கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சாமி சிலைகள், திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகள், பெண் தெய்வங்கள், கும்பகர்ணன் தூங்குவது போன்ற சாமி சிலைகள், கன்னிப்பெண்கள் சிலை உட்பட பல்வேறு வகையான சாமி சிலைகள் கொழு பொம்மை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் தங்களது தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

நவராத்திரி கொழு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தி பாடல்களுக்கு பரத நாட்டியம் மற்றும் புராணக் கதைகளை மாணவ மாணவிகள் நடனமாடி காட்டினர்.

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று தொடங்கிய நவராத்திரி கொழு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...