நீட் தேர்வில் மாணவர்கள் தடுமாற்றத்திற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்- தமிழிசை சவுந்திரராசன்

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது நீட் தேர்வில் ஆரம்ப கால சிரமங்களை தவிர்க்க மாணவர்களின் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்த்து மதிப்பீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

நீட் தேர்வில் மாணவர்கள் தடுமாற்றத்திற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணமென குற்றம்சாட்டிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்தாமல் பிரச்சனையை அரசியலாக்கி மாணவர்களை குழப்பி இருப்பதாக தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் நீட் எதிர்ப்பு கூட்டங்களை திமுக நடத்துவதற்கு பதிலடியாக, அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு பாஜக சார்பில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமென தெரிவித்தார்.

மேலும், சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் பெயர் இருப்பது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, தலைமை செயலகத்திற்கே சென்று நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை இதற்கும் நடவடிக்கை எடுக்கும் என பதிலளித்தார்.

மேலும், பாஜக ஆட்சியில் குற்றம் செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்பதை சமீப கால நடவடிக்கை தெளிவு படுத்துவதாகவும், சந்தேகம் இருப்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி கட்சிசார்பின்றி அனைவரிடமும் பழகியவர் எனவும், அவரை ஒருசார் அரசியல்வாதியாக சுருக்க முயற்சிகள் நடப்பதாகவும், கருணாநிதி வைரவிழாவை வருங்கால கூட்டணி மற்றும் அரசியல் இலாபத்திற்காக நடத்துவதாகவும் கூறிய தமிழிசை சவுந்திரராசன், அவ்விழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டுமென தெரிவித்தார்.

இந்தி எங்கும் திணிக்கப்படவில்லை எனவும், செயற்கை இந்தி எதிர்ப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். சட்டமன்ற உறுப்பினர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாக ஒரு கோவை எம்.எல்.ஏ கூறியிருப்பதாகவும் தெரிவித்த அவர், கொத்தடிமைகளாக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் போல் செயலாற்றினால் ஆட்சி தொடரலாம் என தமிழிசை கூறினார். தற்போதைய ஆட்சி தொடர்வது என்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கையில் தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...