கோவையில் 250-க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகைச் செடிகளுடன் மாபெரும் கண்காட்சி

கோவையில் KEERAIKADAI.COM நிறுவனம் நடத்தும் கீரை மற்றும் மூலிகைகள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்ட வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் மருத்துவ குணங்கள் விளக்கப்படுகின்றன.



Coimbatore: கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அடுத்த NGGO காலணியில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில், KEERAIKADAI.COM நிறுவனம் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகைச் செடி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் மருத்துவ குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

தன்னார்வலர்களாக பங்கேற்றுள்ள கல்லூரி மாணவ மாணவிகள் கீரைகள் குறித்தும் அவற்றின் மருத்துவ பலன்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். இந்த கண்காட்சியில் பொதுவாக உணவில் பயன்படுத்தப்படும் கீரைகள், பல்வேறு மூலிகைச் செடிகள், மற்றும் விஷம் முறிக்கும் மூலிகை செடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



கண்காட்சிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். QR Code மூலமும் பதிவு செய்து கொள்ள முடியும். பெரும்பாலான பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களும் வருகை தந்து கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்கின்றனர்.

KEERAIKADAI.COM நிறுவனர் ஸ்ரீராம் பிரசாத் கூறுகையில், "ஒரு காலத்தில் 500 வகையான கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை உட்கொண்டு வந்த நிலையில், தற்போது பெரும்பாலானோர் அதனை மறந்து விட்டனர். இது குறித்து பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்றார்.



மேலும் அவர், "சென்னையில் இதுபோன்ற கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் 500-க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகை செடிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் கீரை மற்றும் மூலிகைச் செடிகளை வாங்க விரும்பினால், KEERAIKADAI.COM இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அவர்களிடம் உள்ள கீரைகள் பூச்சி கொல்லி மருந்துகள் எதுவும் சேர்க்கப்படாமல், இயற்கை விவசாயம் சார்ந்து தயாரிக்கப்படுகின்றன. பதப்படுத்துவதற்கு உப்பு, மஞ்சள் தூள், மிளகு உள்ளிட்டவற்றையே பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.



தற்போதைய கண்காட்சியில் உள்ள பெரும்பாலான கீரைகள் காட்சிப் பொருள்களாக மாறிவிட்டதாகவும், அவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் ஸ்ரீராம் பிரசாத் குறிப்பிட்டார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...