சேலம் கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.1.67 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்கள், முறையற்ற பயணிகள் மற்றும் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றவர்களிடம் இருந்து ரூ.1.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக செப்டம்பர் மாதத்தில் ரூ.1.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களை கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 13,553 பேரிடமிருந்து ரூ.1,01,87,158 அபராதமாக வசூலிக்கப்பட்டது. ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 14,590 பேரிடமிருந்து ரூ.64,81,870 வசூலிக்கப்பட்டது. மேலும், ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 58 பேரிடமிருந்து ரூ.44,026 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மொத்தமாக ரூ.1,67,13,054 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரயில்வே துறையின் வருவாய் இழப்பை தடுக்க முடியும் என்றும், பயணிகள் முறையான பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...