பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மையம் திடீர் மூடல்: பயணிகள் அவதி

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்களும், ரயில்வே நல சங்க நிர்வாகிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமான பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை, வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.



ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது.



இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான வால்பாறை பகுதிக்கும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் இருந்த போதும், பயணிகள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. மேலும், தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஒரு முன்பதிவு சேவை மையத்தை ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால், மூடப்பட்ட முன்பதிவு சேவை மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று ரயில்வே நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...