கோவையில் நடைபெற உள்ள ATA Expo 2024க்கு முன்னோடியாக விழிப்புணர்வு பேரணி

கோவையில் அக்டோபர் 8, 9 தேதிகளில் நடைபெற உள்ள ATA Expo 2024க்கு முன்னோடியாக, அக்டோபர் 1ஆம் தேதி ரேஸ்கோர்ஸில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.


Coimbatore: கற்பகம் புத்தாக்க மற்றும் அடைகாப்பக கவுன்சில் (KIIC), உயிர்வேதியியல் பொறியியல் துறை, KAHE, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, STPI, TANCAM, கற்பகம் புத்தாக்க மையம் (KIC), தமிழ்நாடு மூளைவாதம் சங்கம் (SST), சென்னை, காக்னிசண்ட், இளைஞர் முன்முயற்சி அணுகல் (YIA), இளம் இந்தியர்கள் (YI), மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஆகியவை இணைந்து, ATA Expo – உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் அணுகல் சாதனங்கள் கண்காட்சியை 2024, அக்டோபர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் கோவையில் நடத்த உள்ளன.

இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நவீன உதவித் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதாகும். 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகளுடன் இதில் பங்கேற்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.



இதனை முன்னிட்டு, உதவித் தொழில்நுட்பங்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2024 அக்டோபர் 1-ஆம் தேதி கோவையின் ரேஸ்கோர்ஸில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்தப் பேரணியை கிராந்தி குமார் பாடி, I.A.S., கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் முருகையா, முதன்மை நிர்வாக அதிகாரி, கற்பகம் நிறுவனங்கள், டாக்டர் பிரபாகரன், தலைவர், KIIC, தனசேகர், மேலாளர், கற்பகம் இனோவேஷன் மற்றும் இன்கியுபேஷன் கவுன்சில், டாக்டர் கமல் ராஜ், தலைமைப் பேராசிரியர், உயிர்வேதியியல் பொறியியல் துறை, KAHE, காயத்ரி, திட்டத் தலைவர், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, மற்றும் காங்ஞிசன்ட் குழுவினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.





கற்பகம் உயர் கல்வி அகாடமி மற்றும் கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர்கள், NSS தன்னார்வ தொண்டர்கள், மற்றும் கோவையில் உள்ள மாற்றுத் திறனாளிகளும் இந்த விழிப்புணர்வு பேரணியில் பெரும் பங்காற்றினர்.

இந்நிகழ்வு, சிறப்புத் தேவைகள் உள்ளவர்களின் சுதந்திரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான புதுமையான தீர்வுகளை ஊக்குவிக்கும் விதமாக மிக முக்கியமானதாக அமைகிறது. ATA Expo – 2024, உதவித் தொழில்நுட்ப துறையில் பங்குதாரர்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கும் என்றும், புதிய கூட்டாண்மைகள் மற்றும் புதுமைகள் உருவாக புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...