கோவை மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை பணிகளுக்கான மாதிரி நேர்காணல் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 1933 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேர்காணலுக்கு முன் மாதிரி நேர்காணல் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு முன்னதாக, தேர்வர்களுக்கு உதவும் வகையில் மாதிரி நேர்காணல் ஒன்று நடத்தப்பட உள்ளது.

இந்த மாதிரி நேர்காணல் அக்டோபர் 4 ஆம் தேதி கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த மாதிரி நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

மாதிரி நேர்காணலில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, 9361576081 என்ற தொலைபேசி எண் வழியாகவோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...