பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திடீர் மழையால் ஆழியாறு கவியருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியாறு கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாகவும், வெயிலின் சூட்டை தணிக்கவும் சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு படையெடுத்தனர்.

நீண்ட வரிசையில் காத்து நின்று அருவியில் வரும் சிறிதளவு நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். இந்நிலையில் இன்று மதியத்திற்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது.



இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை விரைவாக வெளியேறும்படி வனத்துறையினர் அறிவித்தனர். மேலும் நீரின் நிறம் மாறி அதிக அளவில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அருவியில் நீர்வரத்து சீரான பின்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...