காந்தி ஜெயந்தி: கோட்டை மருதூரில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோட்டை மருதூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டை மருதூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் வடிவு சிவசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மலர்கொடி மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.



கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.



இதைத் தொடர்ந்து அறுபதுக்கு மேற்பட்ட பொதுமக்கள், சாலை வசதி, கலைஞர் உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரிடம் வழங்கினர்.



இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...