கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு: கிராம சபை கூட்டத்தில் மனு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு வழங்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு தலைமை வகித்தார்.

தமிழக அரசு சமீபத்தில் கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கணக்கம்பாளையம் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு வழங்கப்பட்டது.



இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், கணக்கம்பாளையம் ஊராட்சியை தனி ஊராட்சியாகவே தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த இணைப்பு நடைபெற்றால், கணக்கம்பாளையம் பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த மனு வாசிக்கப்பட்டது. இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.

கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், தேவைப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் முடிவு செய்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...