வால்பாறை அருகே இடியும் நிலையில் பயணியர் நிழற்கூரை: புதிய நிழற்கூரை கட்ட மக்கள் கோரிக்கை

வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரை சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பயணியர் நிழற்கூரை இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மாதா கோவில் சந்திப்பில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த நிழற்கூரை தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

நிழற்கூரையின் பக்கவாட்டு சுவர்களும், மேற்கூரையும் பெரிதும் சேதமடைந்துள்ளன. இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் இந்த நிழற்கூரையை பயன்படுத்துவதில்லை. மேலும், நிழற்கூரை பள்ளத்தில் அமைந்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லாத நிலை நிலவுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூரையை இரவு நேரங்களில் சிலர் திறந்தவெளி மதுபான விடுதியாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...