வால்பாறை அருகே இடியும் நிலையில் பயணியர் நிழற்கூரை: புதிய நிழற்கூரை கட்ட மக்கள் கோரிக்கை

வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரை சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பயணியர் நிழற்கூரை இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மாதா கோவில் சந்திப்பில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த நிழற்கூரை தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

நிழற்கூரையின் பக்கவாட்டு சுவர்களும், மேற்கூரையும் பெரிதும் சேதமடைந்துள்ளன. இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் இந்த நிழற்கூரையை பயன்படுத்துவதில்லை. மேலும், நிழற்கூரை பள்ளத்தில் அமைந்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லாத நிலை நிலவுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூரையை இரவு நேரங்களில் சிலர் திறந்தவெளி மதுபான விடுதியாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...