விபத்துக்களுக்கு வழி வகுக்கிறதா ‘பஸ்-பே?

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 இடங்களை தேர்வு செய்து போலீசார் அங்கு ‘பஸ்-பே’ அமைத்தனர். நகர பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், ‘பஸ்-பே’க்களால் விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் நகர பேருந்துகள் திடீரென இடதுபுறம் இருக்கும் ‘பஸ்-பே’ நோக்கி திரும்பும் போது பேருந்தின் பின்புறம் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘பஸ்-பே’வில் இது போன்ற விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த அமைக்கப்பட ‘பஸ்-பே’க்களால் தற்போது சிறு சிறு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. பொதுமக்கள் சிறிய அளவிலான காயங்கள் அல்லது, வாகனத்தில் கீறல் மட்டும் ஏற்படுவதால் புகார்களை அளிக்க தயங்கி வருகின்றனர். 

இந்த பிரச்சனையில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை கொண்டுவர வேண்டும். ‘பஸ்-பே’ தொடங்குவதற்கு முன் சற்று தொலைவில் இருந்து பேருந்துகள் மட்டும் செல்லுமாறு சிறிய கற்களை வைத்து பாதை அமைத்தால் இந்த விபத்துக்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது’ என்றனர்.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...