மஹாளய அமாவாசை: மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கூடி, பவானி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தி வழிபாடு நடத்தினர்.



கோவை: மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த திரண்டனர்.



அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பவானி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பவானி நதி மாதேஸ்வரன் மலைக்கோவில் அருகே அமைந்துள்ள இந்த நந்தவனம் காசிக்கு நிகராக கருதப்படுகிறது.

இங்கு தர்ப்பணம் செலுத்தினால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் மற்றும் குடும்பம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அமாவாசை அன்று பொதுமக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.



கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் காய்கறிகள், பழங்கள், பிண்டங்கள் வைத்து அர்ச்சகர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவற்றை பவானி ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபாடு நடத்தினர்.



ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆண்டும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் கூடி, தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் செலுத்தி மரியாதை செலுத்தினர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...