உடுமலையில் திடீரென தீப்பிடித்த புதிய கார்: கணவன் மனைவி உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் தேவாலயத்திலிருந்து திரும்பும் வழியில் அவர்களது புதிய மாருதி சியாஸ் கார் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.



திருப்பூ: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாதிக் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வில்லியம்ஸும் அவரது மனைவியும் தங்களது புதிய மாருதி சியாஸ் காரில் தேவாலயத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் திருப்பூர் சாலை சந்திப்பை அடைந்தபோது, திடீரென காரின் முன்புற இன்ஜின் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், வில்லியம்ஸ் காரை அருகிலுள்ள ஆள் நடமாட்டம் குறைவான பகுதிக்கு திருப்பினார். உடனடியாக இருவரும் காரிலிருந்து வெளியேறி தப்பித்தனர்.

சில நிமிடங்களிலேயே இன்ஜின் பகுதி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது.



காரின் உட்புறம் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.

இச்சம்பவம் குறித்து உடுமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வில்லியம்ஸ் தம்பதியினர் இந்த சொகுசு காரை வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தனர். புதிய கார் ஒன்று இவ்வாறு எரிந்து நாசமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...