உடுமலையில் திடீரென தீப்பிடித்த புதிய கார்: கணவன் மனைவி உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் தேவாலயத்திலிருந்து திரும்பும் வழியில் அவர்களது புதிய மாருதி சியாஸ் கார் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.



திருப்பூ: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாதிக் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வில்லியம்ஸும் அவரது மனைவியும் தங்களது புதிய மாருதி சியாஸ் காரில் தேவாலயத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் திருப்பூர் சாலை சந்திப்பை அடைந்தபோது, திடீரென காரின் முன்புற இன்ஜின் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், வில்லியம்ஸ் காரை அருகிலுள்ள ஆள் நடமாட்டம் குறைவான பகுதிக்கு திருப்பினார். உடனடியாக இருவரும் காரிலிருந்து வெளியேறி தப்பித்தனர்.

சில நிமிடங்களிலேயே இன்ஜின் பகுதி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது.



காரின் உட்புறம் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.

இச்சம்பவம் குறித்து உடுமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வில்லியம்ஸ் தம்பதியினர் இந்த சொகுசு காரை வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தனர். புதிய கார் ஒன்று இவ்வாறு எரிந்து நாசமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...