உடுமலையில் பொறியாளர் தின விழா: மூன்று பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன

உடுமலையில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் சார்பில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. மூன்று சிறந்த பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2025ஆம் ஆண்டு கட்டுமான கண்காட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லெப்டினெனட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் உடுமலை மையத்தின் சார்பாக பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் கையேடு பிரிவு பொறியாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், கட்டிடத் துறையில் பொறியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.



விழாவின் முக்கிய நிகழ்வாக மூன்று சிறந்த பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் துணைப் பொறியாளர் செந்தில்குமாருக்கு மனிதநேய பண்பாளர் விருதும், இளமதிக்கு மனிதநேய வித்தகர் விருதும், செஞ்சூரி கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பொறியாளர் சுந்தரத்திற்கு பசுமை நேய பண்பாளர் விருதும் வழங்கப்பட்டன.

மேலும், 2025ஆம் ஆண்டு உடுமலையில் நடைபெற உள்ள கட்டுமான கண்காட்சிக்கு "அஸ்திவாரம்" என்று பெயரிடப்பட்டது. இந்த கண்காட்சிக்கான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் செப்டம்பர் மாத வரவு செலவு கணக்குகளும் பார்வையிடப்பட்டன.

இந்நிகழ்வில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் உடுமலை மையத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் அருண்குமார், திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை சங்க நிர்வாகி எஸ்.எம். நாகராஜ், சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் மற்றும் உடுமலை பகுதி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...