ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் பிரச்சாரம் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்பிரச்சாரம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.


Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR), உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரத்யேக இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் Dr.குகன் ஆகியோர் பங்கேற்றனர்.



டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர் முன்னிலையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் தொடங்கி வைத்தார். 2024 உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருளான "மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது" என்ற செய்தியுடன் ஒன்றாக அமையும்படி SRIORன் டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் அமைந்தது.

இந்த பிரச்சாரம் மூலம் சமுதாயத்தில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியை எடுக்க, மக்கள் https://mhits.in/SRIOR/breast_cancer_2024/ என்ற இணையதளத்திற்கு அல்லது இதற்கான பிரத்தியேக QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.



இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் Dr.குகன் கூறுகையில், தாமதமாக திருமணம் செய்து கொள்வது, கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்வது, புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் நகர்புற பெண்கள் அதிக அளவில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக கூறினார். இந்தியாவில் 50 சதவீதம் மார்பக புற்று நோய்கள் புற்றுநோய் மேம்பட்ட நிலைகளில் (நிலை 3 அல்லது 4) கண்டுபிடிக்கப்படுகிறது என்றும் இந்த நிலையில் (நிலை 3 அல்லது 4) புற்றுநோய் கண்டறியப்பட்டால், 45 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை மட்டுமே நோயாளியை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.



முறையாக உடற்பயிற்சி செய்வது, மதுப்பழக்கத்தை கைவிடுவது, கீரைகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும் என்றும் Dr.குகன் தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...