கோவை மாவட்டத்தில் காந்தி மற்றும் நேரு பிறந்தநாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் காந்தி மற்றும் நேரு பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 17, 18 ஆம் தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும். வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அறிவித்துள்ளார்.

இப்போட்டிகள் அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) கூட்ட அரங்கத்தில் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கான போட்டி காலை 9:30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி பிற்பகல் 2:30 மணிக்கும் தொடங்கும்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 ஆகும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களில் இரண்டு பேருக்கு தலா ரூ.2,000 சிறப்பு பரிசு வழங்கப்படும்.

பள்ளி தலைமையாசிரியர்கள் முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகளை நடத்தி மாணவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை கல்லூரி முதல்வர்கள் வழியாகவும் அக்டோபர் 10, 2024க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இப்போட்டிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...