கோவை சின்னவேடம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: ரூ.3.48 லட்சம், வாகனங்கள் பறிமுதல்

கோவை சின்னவேடம்பட்டியில் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் ரூ.3.48 லட்சம், கார், பைக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 29) போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தொப்பம்பட்டியைச் சேர்ந்த செந்தில் குமார் (41), ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (43), சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த தனரா (32) மற்றும் சத்தியமூர்த்தி (27) ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலீசார் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் பணம், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை சட்டவிரோத சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல்விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...