கோவை தெலுங்குபாளையத்தில் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்தவர் கைது

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் நேற்று (செப்டம்பர் 29) நடந்தது.


கோவை: கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் தெருவைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (செப்டம்பர் 29) அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்த மனோஜை, அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தி முனையில் மிரட்டினார். பின்னர் மனோஜிடம் இருந்த ரூ.1,400 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து மனோஜ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போன் மற்றும் பணத்தை பறித்தவர் தெலுங்குபாளையம் சிவசக்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித் குரு (39) என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...