கோவை தெலுங்குபாளையத்தில் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்தவர் கைது

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் நேற்று (செப்டம்பர் 29) நடந்தது.


கோவை: கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் தெருவைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (செப்டம்பர் 29) அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்த மனோஜை, அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தி முனையில் மிரட்டினார். பின்னர் மனோஜிடம் இருந்த ரூ.1,400 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து மனோஜ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போன் மற்றும் பணத்தை பறித்தவர் தெலுங்குபாளையம் சிவசக்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித் குரு (39) என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...