கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையன் ஆசார் அலியின் கால் அகற்றப்படுகிறது

நாமக்கல் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலியின் கால் அழுகி வருவதால், கோவை அரசு மருத்துவமனையில் அகற்றப்படுகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளைக் குற்றவாளி ஆசார் அலியின் வலது கால் அகற்றப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயத்தால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு ஆசார் அலியின் கால் அழுகத் தொடங்கியது. இதனால் அவரது வலது கால் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவின் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடையது. கொள்ளையர்கள் சுமார் 66 லட்சம் ரூபாயை கன்டெய்னர் லாரியில் கடத்திச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவர் தப்பியோடினார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆசார் அலி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தனிப்படை விரைந்து வருவதால், சம்பவம் நடந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...