கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையன் ஆசார் அலியின் கால் அகற்றப்படுகிறது

நாமக்கல் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலியின் கால் அழுகி வருவதால், கோவை அரசு மருத்துவமனையில் அகற்றப்படுகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளைக் குற்றவாளி ஆசார் அலியின் வலது கால் அகற்றப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயத்தால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு ஆசார் அலியின் கால் அழுகத் தொடங்கியது. இதனால் அவரது வலது கால் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவின் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடையது. கொள்ளையர்கள் சுமார் 66 லட்சம் ரூபாயை கன்டெய்னர் லாரியில் கடத்திச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவர் தப்பியோடினார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆசார் அலி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தனிப்படை விரைந்து வருவதால், சம்பவம் நடந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...