கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையன் ஆசார் அலியின் கால் அகற்றப்படுகிறது

நாமக்கல் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலியின் கால் அழுகி வருவதால், கோவை அரசு மருத்துவமனையில் அகற்றப்படுகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளைக் குற்றவாளி ஆசார் அலியின் வலது கால் அகற்றப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயத்தால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு ஆசார் அலியின் கால் அழுகத் தொடங்கியது. இதனால் அவரது வலது கால் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவின் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடையது. கொள்ளையர்கள் சுமார் 66 லட்சம் ரூபாயை கன்டெய்னர் லாரியில் கடத்திச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவர் தப்பியோடினார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆசார் அலி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தனிப்படை விரைந்து வருவதால், சம்பவம் நடந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...