கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர வாய்ப்பு: அக்டோபரில் தினமும் 10,000 பயணிகள், 30 விமானங்கள்

கோவை விமான நிலையத்தில் அக்டோபர் மாதம் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10,000 ஆகவும், விமானங்கள் எண்ணிக்கை 30 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரிவுகளில் சேவைகள் அதிகரிப்பதால் 4 ஆண்டுகளுக்கு பின் முன்னேற்றம்.


கோவை: கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரிவுகளில் சேவைகள் அதிகரிப்பதால், கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் அக்டோபர் மாதம் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமานங்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுவதற்கு முன் தினமும் 35 அல்லது 36 விமானங்கள் இயக்கப்பட்டன. தவிர தினமும் 10 ஆயிரம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தினர். தற்போது விமான சேவைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதால் தினசரி இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 27 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹைதராபாத்துக்கு தினசரி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக ஒரு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. கோவை-கோவா இடையே ஏற்கெனவே வழங்கப்பட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை அக்டோபரில் மீண்டும் தொடங்கப்படுகிறது," என்றார்.

மேலும் அவர், "கோவை-அபுதாபி இடையே வழங்கப்பட்டு வரும் சேவை குளிர்கால அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை-சிங்கப்பூர் இடையே தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஸ்கூட் நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 27-ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.

விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அக்டோபர் மாதத்தில் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமானங்கள் எண்ணிக்கை 30-ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் பழைய நிலை காண வாய்ப்பு உருவாகியுள்ளது.

நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து டெல்லிக்கும், வெளிநாட்டு பிரிவில் இலங்கை மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "கோவை விமான நிலையம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருவது சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்," என்று சதீஷ் குறிப்பிட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...