மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி: பவானி ஆற்றில் குதித்து தப்ப முயன்ற குற்றவாளி சிக்கினார்

மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்ப பவானி ஆற்றில் குதித்தார். எலும்பு முறிவு காரணமாக பிடிபட்ட அவர் மீது 16க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று பவானி ஆற்றில் குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிக்கினார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டார்னிங்டன் பகுதியைச் சேர்ந்த சசி (38) என்ற பெயிண்டர், தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளின் கிளட்ச் வயர் அறுந்துவிட்டது. அப்போது அவ்வழியே வந்த இளைஞர்கள் மூவர் உதவி செய்தனர். பின்னர் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.



சசி பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு மிரட்டினர். வாக்குவாதத்தின் போது, சூர்யா என்ற இளைஞர் கத்தியால் சசியை குத்தினார். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றனர். சசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சூர்யாவை (21) போலீசார் தேடி வந்தனர். இன்று மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் பகுதியில் அவரைக் கண்டுபிடித்த போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற சூர்யா, பவானி ஆற்றில் குதித்தார்.

குதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...