கோவையில் இரண்டு நாள் சர்வதேச கட்டுமான கண்காட்சி தொடக்கம்

கோவை கொடிசியாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சி தொடங்கியது. 120 ஸ்டால்களுடன் கூடிய இந்த கண்காட்சியில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.



Coimbatore: கோவை கொடிசியாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சி இன்று தொடங்கியது. கோவை மண்டலம் கட்டிட பொறியாளர் சங்கமும் மற்றும் கட்டுமானம் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் இந்த கண்காட்சியை காவேரி குரூப் ஆப் கம்பெனி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர், லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் முத்துராமன், ராமு இண்டஸ்ட்ரீஸ் ராமு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.



கட்டிட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா ஏ ஹாலில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று (28ம் தேதி) மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 120 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இலவசமாக வந்து பங்கு பெறலாம்.

இந்த நிகழ்வில் கோசீனா கான் பெஸ்ட் தலைவர் வி பி பழனிச்சாமி, க்ரிக் கான் பெஸ்ட் தலைவர் ராஜதுரை, செயலாளர் செந்தில்நாதன், எஸ் கே இளங்கோவன், பொருளாளர் சுந்தர்ராஜன், எம் செந்தில் குமார் மற்றும் கோசீனா, க்ரிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...