கோவை கூடலூரில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை கொண்டாடிய திமுகவினர்

கோவை கூடலூர் வீரபாண்டி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் அறிவரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் கொண்டாடினர். நகர திமுக சார்பில் நகர செயலாளர் அறிவரசு தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியின் வீரபாண்டி பிரிவில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், அப்பகுதி மக்கள், பேருந்து பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகரமன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், அகில் சந்திரசேகர் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர், ஐ.டி.விங் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...