மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு: அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்கு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் டம்ளர் வீசி, ஆவணங்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 9 அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

கூட்டத்தில் மக்கள் பிரச்சினை குறித்து பேசும்போது அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, 7-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் முகமது இப்ராஹீம் (சலீம்) தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சில்வர் டம்ளரை தூக்கி தரையில் வீசினார். அது தெறித்து நகர் மன்ற தலைவர் மற்றும் கமிஷனர் அருகில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 18-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சுனில்குமார் ஆவேசமாக மன்றத்தின் முன் வைக்கப்பட்ட தீர்மான நகலை கிழித்து வீசினார். இதனையடுத்து போலீசார் கூட்ட அரங்கில் நுழைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, அ.தி.மு.க கவுன்சிலர்களின் வன்முறை போக்கை கண்டித்து, வரும் இரு கூட்டத் தொடர்களில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நகராட்சி தலைவர், கமிஷனர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

நகராட்சி கமிஷனர் அமுதா அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...