திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: இந்து மக்கள் கட்சி சார்பில் சிறப்பு பூஜை

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சையை கண்டித்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சையைக் கண்டித்தும், கோயில் புனிதத்தைக் காக்கவும் இந்து மக்கள் கட்சி சார்பாக கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில், கோயில் புனிதத்தை கெடுக்கும் கயவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வுக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் புகைப்படத்தை பிரசாதமாக வழங்கினார்.

இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு எதிராக தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், கோயில்களின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...