உடுமலையில் ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் மனைவி நினைவாக 450 பேருக்கு 9 லட்சம் மதிப்பிலான உதவிகள்

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மறைந்த தனது மனைவி மீனம்மாளின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 450 ஏழை எளிய மக்களுக்கு 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.



திருப்பூர்: உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு 9 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 450க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், சேலை, போர்வை உள்ளிட்ட 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் நிசார் அகமது, அனைத்து துறை ஓய்வு ஊழியர்கள் சங்கம் உடுமலை வட்ட கிளை தலைவர் தாசன், உடுமலை நகர கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் துரைராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட நிர்வாகி சுதா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், நகர கூட்டுறவு பண்டக சாலை எழுத்தர் லதா, கணக்கம்பாளையம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற வட்டாச்சியர் நடராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இது போன்ற தொடர் உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வரும் கிருஷ்ணனின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. தனது மனைவியின் நினைவாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் இவரது செயல் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Newsletter

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...