ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் 22-வது liveSurge பயிலரங்கம்: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் நடைபெற்றது. ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் இன்று துவங்கியது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கின் முதல் நாளில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் டாக்டர் முரளிதரன், கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சேர்மன் டாக்டர் சந்திரசேகர், ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.



இந்த பயிலரங்கில் ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பல்வேறு அமர்வுகளில் இருதய அறுவை சிகிச்சை சம்பந்தமான தகவல்களை காணொளி காட்சிகள் மூலம் விளக்கியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.



இருதய அறுவை சிகிச்சை துறையில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்தான தகவல்கள் வழங்கப்பட்டன.



ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறுகையில், "22-வது liveSurge பயிலரங்கம் கார்டியோதோராசிக் துறையில் உள்ள முக்கிய தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த பயிலரங்கம் பங்கேற்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும்" என்றார். மேலும், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு 1800 ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.



இந்த பயிலரங்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை ஒன்றினைத்ததோடு, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சை துறையில் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு தயாராகவும் பங்கேற்பாளர்களுக்கு இந்த பயிலரங்கம் பெரிதும் உதவியது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...