மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை உறுதியளித்ததால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம் 13வது வார்டு கணேஷ்புரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்பொழுது தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி வருகின்றார். இதனால் அவசர தேவைக்காக அவசர ஊர்தி கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த மே 31 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.



இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை இன்று 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

எனினும், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் கிடைக்காதபட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...