கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமம் எடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமம் எடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். பொதுமக்கள் புகார் தெரிவிக்க அலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுப்பதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

கோவை பேரூர் வட்டத்துக்குள்பட்ட ஆலாந்துறையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வுமேற்கொண்டு கனிமத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட பகுதியில் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவால் தணிக்கை செய்து, அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களை அளவிட்டு அபராதம் விதிக்க கோவை தெற்கு கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வதைத் தடுக்கும் வகையில் வருவாய்த் துறை, வனத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கனிமம் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் உரிய அனுமதிச் சீட்டினை அனுமதிபெற்ற குத்தகைதாரர்களிடம் பெற்று வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். குத்தகைதாரரும் கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனத்துக்கு தவறாது நடைசீட்டினை ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்ப வேண்டும். உரிய நடைசீட்டு இல்லாத வாகனங்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச்செல்வது தொடர்பாக பொதுமக்கள் 95660-38186 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...